சவால்கள்

எங்கள் இருதயங்களை உயிர்ப்பியும் (revive our hearts) நிகழ்ச்சிகளிலேயே, இந்த 30 நாள் கணவரை ஊக்குவிக்கும் சவாலை தான், அநேக இருதயங்களையும், திருமணங்களையும் உருமாற்றி அமைக்க — தேவன் அதிகமாக பயன்படுத்தியுள்ளார். இப்போதும், உங்கள் கணவரை குறித்த தவறான காரியத்தை, அவரிடமும் மற்றும் யாரிடமும் பேசாமல், அவரிடம் நீங்கள் பாராட்டும் நல்ல காரியங்களை தினமும் அவரிடமும், வேறு ஒருவரிடமும் பேசுவதற்கான சவாலை எடுக்கப் போகிறீர்கள். இதன் மூலம், தேவன் உங்களுடைய திருமணத்தில் ஆழமாக கிரியை செய்யப் போகிறார். ஆனால், முதலாவது அவர் உங்களுடைய சொந்த இருதயத்தில் தான், இன்னும் அதிகமாக கிரியை செய்வார் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளூங்கள்.

இந்த சவாலில், உங்களை ஊக்குவிக்கத்தக்கதாக, தேவனுடைய வார்த்தையில் வேரூன்றிய ஒரு சிறு தியானத்தை தினமும் உங்களுக்கு அனுப்பப் போகிறோம். இந்த தியானம், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கத்தக்கதாகவும், நீங்கள் கற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்தும் படியாகவும் — தினமும் சில யோசனைகளையும் வழங்கப் போகிறோம். இந்த சவாலின் மூலம், தேவன் உங்களுக்கு என்ன கற்பித்து கொண்டிருக்கிறார் என்பதை கவனித்து பார்த்து, உங்களுடைய டயரியில் அவற்றை தொடர்ந்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போதும், இந்தப் பிரயாணத்தை தொடங்கும் நீங்கள், உங்கள் இருதயத்தை தயார்ப்படுத்த, இன்றும் சிறிது நேரத்தை கர்த்தருடன் ஜெபத்தில் செலவிடுவீர்களா?. உங்களுடைய தற்போதைய உணர்ச்சிகளையும், கவலைகளையும் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் கர்த்தரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். வருகிற 30 நாட்களிலும், அவர் வல்லமையோடு உங்களுடைய திருமணத்தில் கிரியை செய்யும்படியாக, அவரிடமே கேளுங்கள்.

இந்த சவாலில், நீங்கள் வெற்றி பெற்று, உங்கள் திருமணம் பரிபூரணமாக ஆசீர்வதிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம்.